Wednesday, April 8, 2009

கவிதைத் துளிகள்!

கவிதைத் துளிகள்!
வழங்கியவர்: அபூ முனீறா

1. எய்ட்ஸ்

உந்தி வரும் வீரியத்தை சிந்த இடம் தேடுபவன்
சிறந்ததையா தேடிடுவான்? கிடைத்ததெதுவோ போதுமென்பான்
காமத்திற்கு கண்ணேது? எண்ணிபணத்தை கொடுத்துவிட்டு
எய்ட்ஸை அள்ளி கொண்டு வந்திடுவான்
அற்ப சுகம் தணிந்தாலும் அவன் ஆயுள் வரை அவஸ்தை தான்

2. சுற்றுப்புறச் சூழல்

சுற்றுபுறத்து சூழ்நிலைகள்
சுகமாய் இருக்கச் செய்திடுவீர்!
சுகாதாரத்திற்கு சுதந்திரம் தந்து
சுக ஆரோக்கியமாய் வாழ்ந்திடுவீர்!
காடு வளர்ந்தால் நாடு செழிக்கும்
காடு அழிந்தால் நாடு கொதிக்கும்
வீட்டையும், நாட்டையும் காப்பது போல்
காட்டையும் கண்ணாய்க் காத்திடுவீர்!
நாடு செழிக்க மரம் நடுவீர்!
நலமாய் வாழ வழி வகுப்பீர்!


3. தொண்டன்

கைபிடித்த மனைவிக்கு கஞ்சி ஊற்ற வக்கில்லாதவன்
கட்சித் தலைவனுக்கு கட்டவுட் வைக்கிறான்